நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. மரத்தின் அடியில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீது பட்டுக்கொண்டிருந்தது.
அந்த வழியாக வந்த விறகு வெட்டி ஒருவன் அவனைப் பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாகத்தான் இவன் இருக்கவேண்டும். உழைத்த களைப்பினால்தான் இந்த வெயிலிலும் நன்கு தூங்குகிறான்” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.
அடுத்ததாகத் திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “இரவு முழுவதும் கண் விழித்துத் திருடியிருப்பான் போல இருக்கிறது. அதனால்தான் இந்த நண்பகல் நேரத்தில் கூட அடித்துப்போட்டது போல இப்படித் தூங்குகிறான்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அங்கே வந்தான். “காலையிலேயே இவன் நன்றாகக் குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதுதான் குடிமயக்கத்தில் விழுந்து கிடக்கிறான்” என்று சொல்லிச் சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் அந்த வழியாக வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகைய செயலைச் செய்ய முடியும்” என்று அவனை வணங்கிவிட்டுச் சென்றார்.
அந்த வழியாக வந்த விறகு வெட்டி ஒருவன் அவனைப் பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாகத்தான் இவன் இருக்கவேண்டும். உழைத்த களைப்பினால்தான் இந்த வெயிலிலும் நன்கு தூங்குகிறான்” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.
அடுத்ததாகத் திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “இரவு முழுவதும் கண் விழித்துத் திருடியிருப்பான் போல இருக்கிறது. அதனால்தான் இந்த நண்பகல் நேரத்தில் கூட அடித்துப்போட்டது போல இப்படித் தூங்குகிறான்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அங்கே வந்தான். “காலையிலேயே இவன் நன்றாகக் குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதுதான் குடிமயக்கத்தில் விழுந்து கிடக்கிறான்” என்று சொல்லிச் சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் அந்த வழியாக வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகைய செயலைச் செய்ய முடியும்” என்று அவனை வணங்கிவிட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment