தேவையானப் பொருட்கள்:
முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி பாத்திரம், தண்ணீர், சூரிய வெளிச்சம்
செய்முறை:
பொதுவாக வானில் வானில் பகலில் மட்டுமே தெரியும். அதுவும் மழைத்துõறல் உள்ள நேரத்தில் தான் பெரும்பாலும் தோன்றும். அப்படித் தோன்றுவது இயற்கை வானவில். ஆனால், இந்த வாரம் மேஜிக் முறையில் இருட்டிலும் வானவில்லை தோன்றச் செய்யலாம்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைக்கவும்.
பின்னர், அந்த தண்ணீர் பாத்திரத்தை சூரிய ஓளிப்படுகின்ற இடத்தில் வைக்கவும். அப்போது சூரிய ஒளி தண்ணீர் பாத்திரத்தில் விழும். பாத்திரத்தில் படரும் சூரிய ஒளி அதில் இருக்கும் கண்ணாடியில் பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் சூரிய ஒளியை ஒரு இருட்டு அறையில் செலுத்தினால், அங்கே வானவில்லில் உள்ள ஏழு வண்ணங்களையும் காணமுடியும்.
மேஜிக் சீக்ரெட்:
பொதுவாக சூரிய ஒளியில் ஏழு வண்ணங்கள் உள்ளன. அத்தகைய சூரிய ஒளியை நீரில் பாதி மூழ்கி உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் விழச் செய்து அதனை கண்ணாடி மூலம் பிரதிபலிக்கச் செய்வதால் சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்கள் தெரியும்.
No comments:
Post a Comment