Wednesday 19 February 2014

20 . கண்ணீர் விட்டு அழும் காசு...





தேவையானப்பொருட்கள்:

 காசு, பஞ்சு, தண்ணீர்

செய்முறை: 

ஒரு ரூபாய் காசு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொள்ளவும். பிறகு, அந்தக் காசை பார்வையாளர்களிடம் காட்டுங்கள். காட்டியப்பிறகு, "" இந்தக் காசுக்கும் சில பிரச்னைகள் உண்டு. துன்பம் உண்டு. இது நம்மை போல வாய்விட்டு அழும். ஆனால், அது சொல்லும் கஷ்டத்தை காது கொடுத்துக் கேட்டால் தான் கண்ணீர் விட்டு அழும்.'' என்று கூறிவிட்டு, காசை காது புறம் எடுத்துச் சென்று,"" ஒரு ரூபாய் காசே! உன் கஷ்டத்தை நான் காது கொடுத்து கேட்கிறேன். சொல்ல வேண்டிதை சொல்லிவிட்டு அழு!'' என்று கூறவும். சிறிது நேரத்தில் காசு கண்ணீர் விட்டு அழும். அந்த கண்ணீர் உங்கள் உள்ளங்கையில் இருந்து வழியும். இதை பார்வையாளர்கள் பார்த்து "அட, காசு அழுகிதே!' என்றுஅசந்து போவார்கள்.

மேஜிக் சீக்ரெட் :

பார்வையாளர்களுக்குத் தெரியாமல் பஞ்சை முன்னதாகவே தண்ணீரில் நனைத்து காதின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு காசை உள்ளங்கையில் வைத்து கொண்டு அனைவரிடமும் காட்ட வேண்டும். இப்பொழுது கையை காதின் பக்கம்கொண்டு போய் மந்திரம் போடுவது போல பேசிக்கொண்டே பஞ்சை அழுத்த வேண்டும். பஞ்சை அழுத்தியதுமே தண்ணீர் காசு வழியாக கொட்டும். திறமையாக செய்தீர்களானால் யாரும் நம்பித்தான் போவார்கள். அதுவும் உப்புத் தண்ணீர் என்றால் சுவைத்துப்பார்த்தால் உப்பு கரிக்கும்.



No comments:

Post a Comment