Saturday 15 February 2014

நீதிக் கதைகள்-உடலினை உறுதிசெய்




ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.


குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரேஉமக்கு என்னநேர்ந்ததுஏன் குகையை விட்டு இரண்டு நாளாகவெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.

கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது.

சுருண்டு படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்குஎன்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா?அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது.

"கரடியாரே! நான் என்ன செய்வதுஎனக்கு அடிக்கடி உடல்நிலைசரியில்லாமல் ஆகிவிடுகிறதுஅதன் காரணமாக உடலும்சோர்வடைகிறதுநாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டேபோகிறது" என கவலையுடன் கூறியது.


அதனைக்கேட்ட கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும்அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலைவலுப்படுத்த நீர்துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாகவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்அதனால்தான் உமக்குஅடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றது.


கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன்என் உடல் நிலை சீராக நீஎனக்கு உதவி செய்வாயா என்று கேட்டது நரி.


நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும்நாம் இருவரும் சிறிதுநேரம் உற்பயிற்சி செய்யலாம். என்றது கரடி.
 
நரியும்கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன. கரடி உடனே மரக்கிளையைப் பிடித்து ஊஞ்சலாடத் தொடங்கியது. அதனைப் பார்த்து நரியும் சிறிது நேரம் ஆடியது. 


கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது.


தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரிஉணர்ந்தது.

அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படிஇருக்கிறதுஏதோ உற்சாகம் நிரம்பியவர் போன்று காணப்படுகின்றீரேஎன்று கேட்டது.

ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறதுஇதனைப்போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம்மறைந்துவிடும்என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.

அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.


நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

No comments:

Post a Comment