Thursday 10 April 2014

பொன்மொழிகள்-43



ஒவ்வொருவரிடமும் உங்கள் காதைக் கொடுங்கள்;ஆனால்
ஒரு சிலரிடம் மட்டும் வாயைக் கொடுங்கள்.
******
விமரிசகன் என்பவன் ஓடுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நொண்டி.
******
பிறர் நம்மைப் புகழ்வது பூவைப் போன்றது.நாம் அதன் வாசனையை நுகரலாம்,அதை அப்படியே விழுங்கி விடக் கூடாது.
******
உன்னிடம் பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது.
பணம் உன்னிடம் இல்லாவிட்டால் உன்னை எவருக்குமே தெரியாது.
******
சுமை அதிகமாயிருக்கிறதே என்று நான் அழவில்லை .'ஆண்டவனே,முதுகை அகலமாக்கித்தா' என்றுதான் கேட்கிறேன்.
******
பல வாய்களை மூடுவதைவிட,இரு காதுகளை மூடுவது எளிது.
******
ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால் மட்டும் அவனுக்கு அறிவு வளர்ச்சி அடைந்து விட்டதாகப் பொருள் இல்லை.அவன் பதவியில் இருப்பதால்,'உனக்கு அறிவு வளர்ச்சி அடையவில்லை,''என்பதைத்தான் நாம் சொல்ல முடியாமல் போகிறது.
******
கொள்கைகளுக்காகச் சண்டை இடுவது, அவற்றைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் எளிது.
******
காட்டின் அருகாமையில் வாழ்ந்தாலும் விறகை வீணாகச் செலவழிக்காதே
******
அசட்டுத்தனமான பெரும் தவறு எதுவுமே செய்யாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி காண முடியும் என்பதில்லை.அதே தவறை இரண்டாம் முறையும் செய்யாதிருந்தாலே போதும்,வெற்றி கிடைத்துவிடும்.
******
ஒரு மனிதன் தன மனைவிக்காகக் கார்க் கதவைத் திறக்கிறானா,புரிந்து கொள்ளுங்கள்;ஒன்று கார் புதிதாயிருக்கும்.அல்லது மனைவி புதிதாயிருப்பார்
******
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே,
உலகம் உன்னை விழுங்கி விடும்.அதற்காக,
முழுக்க முழுக்க எட்டிக் காயாக இருந்து விடாதே,
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்.
******

No comments:

Post a Comment