Thursday 10 April 2014

பொன்மொழிகள்-41




வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால் 
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
******
முட்டாள்தனம் என்பது புத்தியில்லாமை அல்ல.;
புத்தியை உபயோகிக்காத நிலைதான்.
******
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
முட்டாள்கள் அதில் பாடம் கற்றுக் கொள்வதில்லை.
******
'
முடியாது' என்பது சோம்பேறிகள் முணுமுணுக்கும் மந்திரம்.
******
ஒரு பெண்ணின் உண்மையான அன்புக்கு முன்னால்
எந்த ஆணும் குழந்தையாகி விடுகிறான்.
******
தைரியத்தைவிட ஆர்வம் வென்று விடுகிறது,அச்சங்களை.
******
யாராக இருக்க விரும்புகிறோம் என்பதைவிட
யாருக்காக இருக்க விரும்புகிறோம்
என்பதுதான் முக்கியம்.
******
தன்  மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை சிற்பமாக ஆக்குகிறது
என்பது கல்லுக்குத் தெரியாது.
******
வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் கிடையாது.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்காக செய்தால் தோல்வி.
******

No comments:

Post a Comment