Thursday 10 April 2014

பொன்மொழிகள்-15




ஒவ்வொருவர் கையிலும் தராசு:
தன்னை எடை போட இல்லை.
**********
நாயுடன் உறங்குபவன் உண்ணியுடன் எழுந்திருப்பான்.
**********
நூறு அசடுகளுக்கு தலைவனாய் இருப்பதைவிட
ஒரு அறிவாளிக்கு அடிமையாய் இருப்பதே மேல்.
**********
மனிதன் பாவம் செய்யாத நேரம்
அவன் தூங்கும் நேரம்தான்.
**********
சீவப்பட்ட பென்சில் அழகாக எழுதுகிறது.அனுபவங்களால்
காயப்பட்ட மனிதன் உயர்ந்த தத்துவங்களைப் பேசுகிறான்.
**********
அறிவுரை என்பது விளக்கெண்ணெய் போல.
கொடுப்பது சுலபம்.ஏற்றுக் கொள்வது கடினம்.
**********
குழந்தைகள் ஈரமான சிமெண்ட் மாதிரி.அதன் மேல் எது விழுகிறதோ ,
அது ஆழப் பதிந்து விடும்.
**********
ஓடிச் செல்வதில் பயனில்லை:முன்கூட்டியே
புறப்படிருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
**********
தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்.
**********
ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக
இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.
**********
பலர் இன்ன ஜாதியில் பிறந்தோம்என்பதற்காகப் பெருமை கொள்கின்றனர். சிலர் சிறுமை அடைகின்றனர்.ஆனால் நாம் பிறந்த ஜாதி என்பது நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வில்லை.நமக்கும் தெரியாமல் நடந்த ஒரு பாலியல் விபத்து.இதில் பெருமை என்ன?சிறுமை என்ன?
**********

No comments:

Post a Comment