Thursday 10 April 2014

பொன் மொழிகள்-32



இளமையாக இருக்கும்போது ரோஜா மலர்கள் மீது படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மீது படுக்க நேரிடும்.
இளமையில் தனது தோலை  கடினமாக்கிக் கொண்டவனுக்கு
முதுமையில் முட்கள் குத்தினாலும் வலிக்காது.
********
இசையைக் கேட்டுக் கொண்டே இரவு உணவை உண்பது,உணவை சமைத்த சமையல் காரனையும் ,இசையை இசைத்த கலைஞனையும் அவமானப் படுத்துவதாகும்.
********
சில விவாதங்களுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.ஆனால் முடிவு என்ற ஒன்று இருப்பதில்லை.
********
பணிவு ஒருபோதும் பலவீனம் அல்ல.உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்.
********
உங்கள் முகத்தில் புன்னகையின் ஒளிக்கீற்று இல்லையென்றால் நீங்கள் முழுமையாக உடை உடுத்தியவர் ஆக மாட்டீர்கள்.
********
வாழ்க்கையில் கடினமான மூன்று விஷயங்கள்:
*
ஒரு  ரகசியத்தை பாதுகாப்பது.
**
மனதில் ஏற்பட்ட ஒரு வலியை மறப்பது.
***
ஓய்வு நேரத்தை பலனுள்ளதாகச் செய்வது.
********
ஆயிரம் தெய்வங்களின் மீது நம்பிக்கை வைத்துவிட்டு,உன் மீது நம்பிக்கை வைக்காமல் போனால் உன்னை விடப் பெரிய நாத்திகன் உலகில் யாரும் இல்லை.
********
நான் வசிப்பது ரொம்ப சிறிய சாதாரண வீடுதான்.ஆனால் என் வீட்டு ஜன்னல் வழியாக பரந்து விரிந்த உலகம் தெரிகின்றதே!
  ********
வெற்றியைக் கொண்டாடும்போது தோற்றவர்களைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.அங்கே நாம் வெற்றியின் மூலம் அசிங்கமாகிப் போகிறோம்.
********
பொறாமை ஏற்படுத்துகிற ஞாபகங்களைவிட அது நம் கண்களில் இருந்து மறைக்கும் உண்மைகள் அதிகம்.
********
மகிழ்ச்சி என்பது பிரச்சினைகளே இல்லாத நிலையில் இல்லை: பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
********

No comments:

Post a Comment