Thursday 10 April 2014

பொன்மொழிகள்-38



பசி ருசி அறியாது.
வறுமை வட்டி அறியாது.
******
பல பெரிய செயல்கள் வல்லமையினால் நிறைவேறுவதில்லை.
விடா முயற்சியினாலேயே நிறைவேறுகின்றன.
******
பிறரை விடத்தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன்
எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான்.
******
மற்றவர்களுக்கு நன்மை என்று நினைப்பவன்
தனக்கான நன்மையை ஏற்கனவே சம்பாதித்து விட்டான்.
******
எல்லா மக்களும் தாங்கள் ஒருவரைப் பற்றிஒருவர் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால்,உலகில் நான்கு நண்பர்கள் கூட சேர்ந்திருக்க மாட்டார்கள்.
******
ஏராளமான வாய்ப்புகள் வரும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைசியில் மோசமான ஒன்று கிடைத்துவிடும்.
******
கொடுக்கும்போது தயங்காதே.
இழக்கும்போது வருந்தாதே.
சம்பாதிக்கும்போது பேராசைப் படாதே.
******
முழுவதும் பொய்யான பொய்யோடு முழு பலத்தோடு போர் புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர் புரிதல் மிகவும் கடினமான செயல்.
******
ஒருவன் பொய் சொல்லும்போது அவனைப் பற்றிய மதிப்பு பத்து சதம் உயரலாம்.ஆனால் உண்மை வெளிப்படும்போது ஐம்பது சதம் மதிப்பு குறைந்து விடும்.
******
ஓயாது சொட்டும் நீர்
ஓட்டையாக்கிவிடும் கல்லை.
******

No comments:

Post a Comment