அந்த சலூன்காரருக்கு ஒரே பெருமை ! தன் வாடிக்கையாளிடம் தன் சாகச பெருமைகளை
பீற்றிகொண்டிருந்தார். " சார், இந்த கடைய நடத்த என்ன எல்லாம் வேலை செய்ய வேண்டி இருக்கு சார்.என்கிட்ட
வர எல்லாரும் திருப்தியா போகணும்னு யோசிச்சி யோசிச்சி புதுசுபுதுசா 'கட்டிங்' பண்ணணும்,
வேற எந்த சலூன்லயும் இல்லாத வசதி இங்க இருக்கு சார்"
வாடிக்கையாளர் : அப்படியா ? அப்ப நீங்க ரொம்ப புத்திசாலி னு சொல்லுங்க
ச.கடைகாரர் : அதுல என்ன சார் சந்தேகம் ? இந்த காலத்துல என்ன மாதிரி மூளையோட
இல்லை னாபொழைக்க முடியாது சார்.
வாடிக்கையாளர் : ஹும்....
ச.கடைக்காரர்: சாருக்கு இன்னும் சந்தேகம் போகலே போல. இருங்க இன்னும் கொஞ்ச
நேரத்துலஎன் கடைக்கு ஒரு சின்ன பையன் வருவான். தினமும் வருவான். என்கிட்ட
காசு கேப்பான், நான் ஒருகையில 5 ரூபாயும் இன்னொரு கையில 2 ரூபாயும் வெச்சி எது
வேணும்னாலும் எடுத்துக்கோ னுசொல்லுவேன். ஹா....ஹா....அவன் தினமும் 2 ரூபாய்யை
எடுத்துகிட்டு போவான். முட்டா பயஹா...ஹா....! பாத்துகிட்டே இருங்க.
வாடிக்கையாளர் : சரி...இன்னிக்கி பாக்கலாம்.
சொன்னது போலவே ஒரு சிறுவன் கடைக்கு வந்தான்.
சிறுவன் : அண்ணா வணக்கம். நல்லா இருக்கீங்களா ?
ச.கடைக்காரர் : டேய், வாடா தம்பி, நல்லா இருக்கியா ? என்ன வேணும் டா ?
சிறுவன் : அண்ணா முட்டாய் வாங்க காசு குடுண்ணா.
ச.கடைக்காரர் : ஹா..ஹா...சரி, இந்தா ..5 ரூபாய், 2 ரூபாய் எது வேணுமோ எடுத்துக்கோ.
சிறுவன் அவர் கையில் இருந்து 2 ரூபாய்யை எடுத்துக்கொண்டு ஒடுகிறான்.
வாடிக்கையாளர் : டேய் தம்பி. கொஞ்சம் நில்லுடா . நானும் பாத்துகிட்டே தான் இருந்தேன்
.அவர்தான் 5 ரூபாயும் 2 ரூபாயும் காட்டி எது வேணுமோ எடுத்துக்கோ னு சொல்றாருல்ல
சரியான ஏமாளியா இருக்கியே? 5 ரூபாய் எடுத்துகிட்டா நெறைய முட்டாய் வாங்கலாம்ல ? ஏண்டா இவ்ளோமுட்டாளா
இருக்கே ?
சிறுவன் : சார் , நீங்க வெளிய வாங்க சார். சொல்றேன்.
ச. கடைக்காரர் : ஹா..ஹா...போய் கேளுங்க சார். என்ன நொண்டி சாக்கு சொல்றான்
பாப்போம்.
வாடிக்கையாளர் கடைக்கு வெளியே சென்று சிறுவனை பார்க்கிறார்.
வாடிக்கையாளர் : இப்போ சொல்லுடா.
சிறுவன் : சார், அது வேற ஒண்ணும் இல்ல, தினமும் அண்ணா ஒரு 5 ரூபாயும் ஒரு 2
ரூபாயும் காட்டிஎது வேணும் னு கேக்கறார். நான் 2 ரூபாய் எடுத்துகிட்டு ஓடினா அவருக்கு
என்னை ஏமாத்தினமாதிரி ஒரு சந்தோஷம். ஆனா என்னிக்கு நான் 5 ரூபாய் எடுக்கறேனோ
, அவ்ளோதான் அடுத்த நாள்எனக்கு கிடைக்கிற 2 ரூபாயும் கிடைக்காம போயிடும்.
ஒரு நாளைக்கு கிடைக்கிற 5 ரூபாய் பெரிசா
இல்ல தினமும் கிடைக்கிற 2 ரூபாய் பெரிசா சார் ?
வாடிக்கையாளர் : *??##@!$** ??>= !
நீதி : எல்லாம் தெரிந்தவரும் யாருமில்லை, எதுவுமே தெரியாதவரும்யாரும் இல்லை.
தோற்றத்தை பார்த்து எடை போட கூடாது.
No comments:
Post a Comment